Ad Code

Ticker

6/recent/ticker-posts

வரலாற்றைக் கற்பதற்கான மூலாpதாரங்கள் அலகு 01 தரும் 10 வாலாற்று மூலாதாரம் என்றால் என்ன ?

  வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் 

வாலாற்று மூலாதாரம் என்றால் என்ன ?

 முற்கால மனிதர்களின் செயல்பாடுகள் பற்றிய தகவல்களைத் தரும் அம்சங்கள் வரலாற்று மூலாதாரங்கள் எனப்படுகின்றன . உதாரணமாக புராதன நாணயங்கள் வரலாற்று மூலாதாரங்களாகும் . அவை புராதன மன்னர்கள் பற்றி விபரங்களையும் இலங்கையோடு வர்த்தகத் தொடர்பு தொண்ட நாடுகள் பற்றிய தகவல்களையும் , அவர்களின் உலோக தொழினுட்ப அறிவையம் எமக்குத் தருகின்றன . 

2. வரலாற்று மூலாதாரங்களை எவ்வாறு வகைப்படுத்தலாம் ?

 1 ) இலக்கிய மூலாதாரங்கள்

 2 தொல்பொருள் மூலாதாரங்கள் 

3. இலக்கிய மூலாதாரங்களை எவ்வாறு வகைப்படுத்தலாம் ? 

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே இலக்கிய மூலாதாரங்கள் காலத்திற்கு காலம் தோன்றியுள்ளன . இலக்கிய மூலாதாரங்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம் .

1. உள்நாட்டு இலக்கிய மூலாதாரங்கள்  2. வெளிநாட்டு இலக்கிய மூலாதாரங்கள்

 4. உள்நாட்டு இலக்கியங்களை விளக்குக .

 இலங்கையைச் சேர்ந்தவர்களாக வரலாற்றை அறிய உதவும் கவிதைகளும் , உரைநடைகளும் .. அறிக்கைகளும் , நாட்டார் கதைகளும் , வம்சக்கதைகளும் உள்நாட்டு இலக்கியங்களுள் அடங்கும் . பொதுவாக இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள அனைத்து அம்சங்களையும் வரலாற்றில் நிகழ்ந்தவை என்று ஏற்றுக் கொள்ள முடியாது . இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள தகவல்கள் தொல்பொருள் மூலாதாரங்களால் நிரூபிக்கப்பட்டால் அவற்றை வரலாற்று நிகழ்வுகளாக நாம் ஏற்றுக் கொள்ளமுடியும்

 5. தீபவம்சம் பற்றி விளக்குக 

1 ) உள்நாட்டு இலக்கியங்களுள் மிகப்பழமையானது தீபவம்சம் ஆகும் . 

2 ) இது கி.பி 4 ஆம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டது .

 3 ) இது மகாசேனனின் ஆட்சிக்காலம் முடிவுவரை உள்ள காலப்பகுதிவரையுள்ள தகவல்களைத் 4) இதில் அரசியல் , மற்றும் பௌத்த சமயம் தொடர்பான தகவல்கள் அடங்கியுள்ளன . தருகின்றது .

5 ) திபவம்சத்தில் பின்வரும் குறைபாடுகள் உள்ளன .

அ. பலவிடயங்களை இந்நூல் குறிப்பிடவில்லை

ஆ. இந்நூலில் உள்ள சிலவிடயங்களும் சுருக்கமாகவே உள்ளன .

 6. மகாவம்சம் பற்றி விளக்குக .

 1 ) தீபவம்சத்திலுள்ள குறைபாடுகளை நீக்கும் வகையில் மகாவம்சம் எழுதப்பட்டுள்ளது . 

2 ) மகாவம்சம் சில பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 

3 ) இதன் முதலாம் பாகம் மகாநாமதேரரால் எழுதப்பட்டது . இவர் அநுராதபுரத்தில் இருந்த " திக்சந்த னெவியா பிரிவினா " என்ற பௌத்த கல்வி நிலையத்தில் வாழ்ந்தார் . மகாவம்சத்தின் 2 ம் பாகம் சூளவம்சம் எனப்படுகின்றது .

 4 ) மகாவம்சத்திலும் புத்த பெருமானின் இலங்கை வருகை முதல் மகாசேனனின் ஆட்சிக்காலம் முடிவும் வரை உள்ள காலப்பகுதியில் உள்ள சம்பவங்கள் விபரிக்கப்பட்டுள்ளன . 

5 ) இந்நூல் 5 ஆம் அல்லது 6 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது .

6 )இந்நூலில் துட்டகைமுனுவின் வரலாறு ஒரு வீரவரலாறாகப் போற்றப்பட்டுள்ளது . 

7 ) மகாவம்சம் விஜயனின் வருகை பற்றி விளக்கமாகக் கூறுகின்றது . “ விஜயன் ஆரியவம்சத்தைச் சேர்ந்தவன் . இவன் வரும்பொழுது இலங்கையில் இயக்கர் , நாகர் ஆகிய இரு கோத்திரத்தினர் வாழ்ந்தார்கள் " என்று மகாவம்சம் குறிப்பிடுகின்றது . 

8 ) மகாவம்சம் பின்வரும் சிறப்புக்களை உடைய வரலாற்று நூலாகும் .

 அ . தீபவம்சத்தைப் போலல்லாமல் , மகாவம்சத்தில் வரலாற்று நிகழ்வுகள் விரிவாக எழுதப்பட்டுள்ளன . 

ஆ . மகாவம்சத்தில் இலங்கை வரலாறு தொடர்ச்சியாக எழுதப்பட்டுள்ளது . இலங்கையின் வரலாறு ஒரு நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளது . உலகில் சில நாடுகளிலேயே நாட்டின் வரலாறு ஒரே நூலில் உள்ளடக்கப்பட்டதை அவதானிக்க முடியும் . இலங்கையின் 2500 வருட வரலாற்றை இந்நூலில் இருந்து அறிய முடியும் . மேலே சீன இலக்கிய மூலாதாரங்களுக்கு அடுத்து உலகில் தொடர்ச்சியான வரலாற்றைக் கூறும் நூலாக மகாவம்சம் விளங்குகின்றது . 

இ . இந்நூலில் உள்ள தகவல்கள் கல்வெட்டுக்கள் மூலமும் , ஏனைய தொல்பொருள் மூலாதாரங்கள் மூலமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன . உதாரணமாக மகாவம்சம் உரோம் , சீனா முதலிய பல நாடுகளுடன் வர்த்தக உறவைக் கொண்டிருந்தது என்று கூறுகிறது . இலங்கையின் அகழ்ந்தெடுக்கப்பட்ட உரோம நாணயங்களும் சினமட்பாண்டங்களும் மகாவம்சத்தில் உள்ள தகவல்களை நிரூபிக்கின்றன . 

7. தீபவம்சமும் மகாவம்சமும் எழுதப்படுவதற்கு முன்பு எழுந்த நூல்களைத் உருக . 

1) சிஹல அட்டகதா 
2) உத்தர விஹார அட்டகதா 
3) வினய அட்டகதா
 இந்நூல்களில் இருந்த தகவல்கள் மகாவம்சம் எழுதப்படுவதற்கு உதவின . 

8. மகாவம்சத்திற்குப் பின்பு தோன்றிய உள்நாட்டு இலக்கியங்களைத் தருக . 


1. பீகாவா இது ஒரு உரை நூலாகும் . மகாவசம்சத்தின் முதலாம் பாகத்திற்கு பின்பு எழுதப்பட்ட சில பகுதிகளுக்கு விளக்கம் அளிப்பதற்காக இந்நூல் எழுதப்பட்டது . மகாவம்ச பீகாவ என்றும் வம்சத்தப்பகாசினி என்றும் இந்நூல் அழைக்கப்படுகின்றது . 

2. போதிவம்சம் இது ஜய ஸ்ரீமாகபோதி பிக்குகளின் வரலாற்றை கூறுகின்றது .

 3. இராசரட்டை வரலாற்றைக் கூறும் இலக்கியங்கள் . போதிவம்சமும் , தூபவசம்சம் , தாதுவம்சம் , பூஜாவலிய , சத்தர்மாலங்கார , முதலிய நூல்களும் இராசரட்டை ( அநுராதபுரம் , பொலன்னறுவை ) வரலாற்றைக் கூறுகின்றன .

 4. நிகாய சங்கிரஹய , ராஜவலிய : நிகாய சங்கிரஹய பௌத்த சமய வரலாற்றைக் கூறுகின்றது . ராஜவலிய அரசியல் தகவல்களைக் கூறுகின்றது . இவ்விரண்டு நூல்களும் கம்பளை முதல் கோட்டை வரையிலான வரலாறுகளைக் கற்க உதவுகின்றன .
 
5. கோட்டை , கண்டி இராசதானிகள் பற்றிய இலக்கியங்கள் . கோட்டை முதல் கண்டி இராசதானிவரை இடம்பெற்ற வரலாற்று நிகழ்வுகளை அறிய உதவும் நூல்களாக தூதுகாவியம் , புகழ்காவியம் , போர்க்காவியம் என்பன அமைகின்றன . இம்மூன்று வகை இலக்கியங்களிலும் பல நூல்கள் தோன்றின என்பதை பின்வரும் அட்டவணை காட்டுகின்றது . 

இலக்கிய மூலாதாரங்களைப் பயன்படுத்தும் போது எந்தவிடயங்களில் நாம் செலுத்த வேண்டும் ? 

1. நூல் எழுதப்பட்ட காலம்
 2. நூல் ஆசிரியர் 
3. நூல் ஆசிரியரின் நோக்கம்
 4. நூலுக்கான தகவல் திரட்டப்பட்ட விதம்

இலக்கிய மூலாதாரங்களால் ஏற்படும் நன்மைகள் நான்கு தந்து அவற்றுள் இரண்டை விளக்குக . 

1. வரலாற்றுக்கால ஒழுங்கு முறையை வளர்த்துக் கொள்ள முடியும் . 
2. ஒரு நாட்டின் வெளிநாட்டு உறவுகள் பற்றி அறிய முடியும் . 
3. வெவ்வேறு காலகட்டங்களின் அரசியல் , பொருளாதாரம் , சமூகம் , கலாசாரம் என்பன பற்றிய தகவல்களை அறிய முடியும் . 
4. ஒரு நூலில் கூறப்பட்டுள்ள தகவல்களை இன்னொரு நூலின் மூலம் உறுதிப்படுத்த உதவும் .

 வரலாற்றுக்கால ஒழுங்குமுறையை வளர்த்துக் கொள்ள முடியும் . 


நாட்டின் வரலாற்றை தொடர்ச்சியாக அறிந்து கொள்ள இலக்கிய மூலாதாரங்கள் உதவுகின்றன . மகாநாம தேரரால் எழுதப்பட்ட மகாவம்சம் இலங்கையின் 3000 வருட வரலாற்றைத் தொடர்ச்சியாகத் தருகின்றது . விஜயனின் வருகையையும் அவனது அமைச்சர்கள் அமைத்த குடியேற்றங்களையும் தரும் மகாவம்சம் , அனுராதபுரி இராசதானியையும் பொலன்னறுவை இராசதானியையும் ஆட்சி செய்த மன்னர்களையும் சரியான கால ஒழுங்கில் கூறுகின்றது . இலம்பகர்ண வம்சத்தின் முதல் ஆட்சியாளன் வசபன் என்று மாகம்சம் கூறுகின்றது . இவன் தூபராம தூபிக்கு வட்டதாமனை ஒன்றையும் , இசுருமுனி விகாரைக்கு போயமனை ஒன்றையும் அமைத்தான் என்று மகாவம்சம் குறிப்பிடுகின்றது . இவ்வாறு வரலாற்றுக்கால ஒழுங்கு முறையை நாம் வளர்த்துக்கொள்ள மகாவம்சம் முதலிய இலக்கிய மூலாதாரங்கள் எமக்கு உதவுகின்றன . 

ஒரு நாட்டின் வெளிநாட்டு உறவுகள் பற்றி நன்கு அறிந்து கொள்ள முடியும் .


 இலங்கைக்கும் ஏனைய நாடுகளுக்குமிடையே நிலவிய அரசியல் , வர்த்தக , சமய தொடர்புகளை நாம் நன்று அறிந்துகொள்ள இலக்கியங்கள் உதவுகின்றன . உதாரணமாக ரொபட் நொக்ஸ் அவர்களின் " அன்றைய இலங்கை " என்ற நூல் கொட்டியாரம் ( மூதுர் ) பற்றிய தகவல்களையும் , கண்டி இராச்சியம் பற்றிய தகவல்களையும் தருகின்றது . பிரித்தானியாவைச் சேர்ந்த றொபட் நொக்ஸ் “ ஆன் ” என்ற கப்பலில் கொட்டியாரத்தை அடைந்தார் . பின்பு அவர் கண்டி வீரர்களால் கைது செய்யப்பட்டார் . 02 வருடங்கள் இலங்கையில் தங்கியிருந்த பாகியன் எழுதிய குறிப்புக்கள் இலங்கைக்கும் சீனாவுக்குமிடையே இருந்த சமயத்தொடர்புகளை நன்கு விபரிக்கின்றன . எனவே ஒரு நாட்டின் வெளிநாட்டு உறவுகள் பற்றி நன்கு அறிந்து கொள்ள இலக்கியங்கள் உதவுகின்றன .

12. தொல்பொருட்கள் என்றால் என்ன ? அவை எங்கே கிடைக்கின்றன ?


 பண்டைய மக்களால் பயன்படுத்தப்பட்டு தற்போது எஞ்சியிருப்பவை தொல் பொருட்கள் எனப்படுகின்றன .
அகழ்வு வேலைகளின் போது தொல்பொருட்கள் கிடைக்கின்றன . இலங்கையின் நூதனசாலையில் அதிகமான தொல்பொருட்கள் உள்ளன .

 13. தொல்பொருள் மூலாதாரங்களை எவ்வாறு வகைப்படுத்த முடியும் .


1 . எழுத்தாவணங்கள் 
2. நாணயங்கள் 
3. சிதைவுகள் 
4. சித்திரங்கள்
 5. சிற்பங்கள்
 6. செதுக்கல்கள்.

15. கல்வெட்டுக்களை வகைப்படுத்துக . அவற்றுக்கு உதாரணங்கள் தருக .


 கல்வெட்டுக்களால் ஏற்படும் நன்மைகளைத் தருக . 


1 . ஒரு மொழியின் படிப்படியான வளர்ச்சியை அறிந்து கொள்ளலாம் .
 2 . மன்னர்களின் சேவைகளை அறிந்து கொள்ளலாம் . உ + ம் கல்பொத்த கல்வெட்டு நிசங்கமல்லனின் சேவைகளை விளக்குகின்றது . 

3 . புராதனகால பொருளாதார அம்சங்களை அறிந்துகொள்ளலாம் . உடம் : பதுளை தூண்கல்வெட்டு அக்கால வர்த்தகம் பற்றிய விபரங்களைக் கூறுகின்றது .

4 .  இலக்கியங்களில் உள்ள தகவல்களை கல்வெட்டுக்கள் உறுதிப்படுத்துகின்றன . துட்டகைமுனு பத்துப்பேரை தளபதிகளாக நியமித்தான் என்று மகாவம்சம் கூறுகின்றது . இதனை சித்துல் பவ்வக் கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது .  

நமது நாட்டில் பயன்படுத்தப்பட்ட புராதன நாணயங்களுக்கு உதாரணங்கள் தருக . 


1 . அநுராதபுர காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயம் க்ஷகஹபண ; க்ஷபுராண ; க்ஷதரண ; என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது . 

2 . யானை மற்றும் சுவஸ்திகா உருவங்கள் பதித்த நாணயங்களும் இலட்சுமியின் உருவம் பதித்த நாணயமும் , அக ; என்ற பொன் நாணயமும் புராதன காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்களாகும் . 

3 . பொலன்னறுவைக் காலத்தில் கம்பமஸ்ஸ ; என்ற செப்பு நாணயம் பயன்படுத்தப்பட்டது . இதில் சிங்கத்தின் உருவம் பொறிக்கப்பட்டது . 

4 . இராஜராஜசோழன் இலங்கைக்குரிய தங்க நாணயங்களை வெளியிட்டான் . முதலாம் பராக்கிரமபாகு வெள்ளி நாணயத்தை வெளியிட்டான் .

 5. நாணயத்தை உற்பத்தி செய்த வார்ப்பு அச்சுகளும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன . 

6 . உரோம , சீன , இந்திய நாணயங்களும் இலங்கையில் அகழ்ந்தெடுக்கப் பட்டுள்ளன . 

7. நாணயங்கள் பற்றிய ஆய்வு நாணய விஞ்ஞானம் ; எனப்படும் . 

நாணயங்களால் கிடைக்கும் பயன்களைத் தருக . 


1. இலங்கையுடன் எந்த நாடுகள் வர்த்தக தொடர்புகளைக் கொண்டிருந்தன என்பதை நாணயங்கள் விளக்குகின்றன . 

உ + ம் : உரோம , சீன , இந்திய நாணயங்கள் . 

2  . ஒரு காலத்தில் பயன்படுத்தப்பட்ட உலோக வகைகளை அறிந்துகொள்ள நாணயங்கள் உதவுகின்றன
. உதாரணமாக முதலாம் விஜயபாகு தங்கத்தையும் , முதலாம் பராக்கிரமபாகு வெள்ளியையும் , ஆரிய சக்கரவர்த்தி செம்பையும் நாணயம் தயாரிக்கப் பயன்படுத்தினார்கள் . 

3 . அக்கால தொழினுட்ப வளர்ச்சியை நாம் நாணயங்கள் மூலம் அறிந்துகொள்ள முடியும் . உதாரணமாக சிங்க உருவம் பொறிக்கப்பட்ட வட்டமான செப்பு நாணயத்தை நம்முன்னோர்கள் தயாரித்துள்ளார்கள் . இயந்திரங்கள் இல்லாத அக்காலத்தில் சிங்க உருவம் பொறிக்கப்பட்டமை , அக்கால மக்களின் தொழினுட்ப அறிவையும் , கலைத்திறனையும் காட்டுகின்றது .

 4. நாணயங்கள் நாட்டின் பொருளாதார நிலையைப் புலப்படுத்துகின்றன . தங்க நாணயங்கள் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கின்றன . 


பின்வரும் ஏனைய வரலாற்று மூலாதாரங்களை விளக்குக . 


1. புராதன சிதைவுகள் :


 பழைய கட்டடங்கள் , விகாரைகள் , கற்றூண்கள் , குளங்கள் , பொய்கைகள் , அரச மாளிகைகள் , கோட்டைகள் என்பவற்றின் இடிபாடுகள் என்பனவற்றை புராத சிதைவுகள் எனலாம் . இவை பின்வருவனவற்றை அறிய எமக்கு உதவுகின்றன . 

அ ) அவர்களின் கடின உழைப்பு

ஆ ) அவர்களின் தொழினுட்ப அறிவு 

இ ) எமது முன்னோர்களின் பக்தி 

ஈ ) அவர்களின் ஒற்றுமை .

 துட்டகைமுனு கட்டிய ருவன்வெலிசாய என்ற விகாரை பிரமாண்டமானது . ஆரம்பத்தில் இவ்விகாரையின் உயரம் 300 அடிகளாகவும் , தாதுகர்ப்பத்தின் அடிப்பகுதியின் விட்டம் 298 அடிகளாகவும் இருந்தன . இதுபோன்ற பல புராதன சிதைவுகள் நம் முன்னோர்களின் ஆற்றல்களைப் புலப்படுத்துகின்றன . 

சித்திரங்கள் . 


எமது முன்னோர்களால் வரையப்பட்ட சித்திரங்கள் பயனுள்ள வரலாற்று மூலாதாரங்களாக விளங்குகின்றன . அவ்வாறான ஓவியங்களுள் சிகிரியா ஓவியங்களையும் லங்காதிலக சலை மனையிலுள்ள ஓவியங்களையும் , திவங்க சிலை மனையிலுள்ள ஓவியங்களையும் , கல்விகாரையில் உள்ள ஓவியங்களையும் உதாரணங்களாகக் குறிப்பிடலாம் . ஓவியங்கள் அக்கால மக்களின் வாழ்க்கை அம்சங்களை அறிந்து கொள்ள நன்கு பயன்படுகின்றன . உதாரணமாக சிகிரியா ஓவியங்கள் மூலம் பின்வரும் தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும் . 

அ . அவர்களது ஆடைகள் 

ஆ . அவர்கள் பயன்படுத்திய ஆபரணங்கள் 

இ . அக்காலப் பெண்கள் பயன்படுத்திய பூக்கள் 

ஈ . அக்கால மக்களால் பயன்படுத்தப்பட்ட நிறங்கள் . 

சிகிரிய ஓவியங்களில் தங்கநிறத்தில் வரையப்பட்ட பெண்கள் தமது கைகளில் மலர்களையும் , நீல நிறத்தில் வரையப்பட்ட பெண்கள் தமது கைகளில் மலர்த்தட்டுக்களையும் ஏந்திய வண்ணம் உள்ளனர் . 

செதுக்கல்கள் . 


எமது முன்னோர்களால் பல செதுக்கல் படைப்புக்கள் செதுக்கப்பட்டுள்ளன . அவற்றுள் குதிரைத்தலையும் மனிதனும் , இசுறுமுனிய காதலர் சோடி , காவற்கல் . ஹொரவக்கல் , சந்திரவட்டக்கல் என்பன முக்கியமானவை செதுக்கல் படைப்புக்கள் பின்வரும் தகவல்களை எமக்கு வழங்குகின்றன . 

1. இசுறுமுனிய காதலர் சோடி செதுக்கல் படைப்பு எமது முன்னோரின் கலைப்படைப்பாற்றலை விளக்குகின்றது . 

2. காவற்கல் அம்மக்களின் சமய நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது .

3. ஹொரவக்கல் எமது முன்னோரின் கடின உழைப்பை பறைசாற்றுகின்றது.

 4. சந்திர வட்டக்கல் அக்கால மக்களோடு தொடர்புபட்ட பறவைகளையும் , மிருகங்களையும் , பூக்களையும் எமக்கு உணர்த்துகின்றது . மலர்ந்த தாமரைப் பூவின் பாதி உருவம் சந்திரவட்டக்கல்லின் நடுவே செதுக்கப்பட்டுள்ளது . அதனைச் சுற்றி பூங்கொடி உருவமும் அதனையடுத்து அன்னப்பறவைகளின் வரிசையும் , அதனையடுத்து சிங்கம் , யானை , குதிரை , எருது என்பனவும் இறுதியில் பூவிதழ் தீச்சுடர் உருவமும் உள்ளன .

 5 . அக்கால சமயநிலையை செதுக்கல்கள் உணர்த்துகின்றன . உதாரணமாக பொலன்னறுவை சந்திரவட்டக்கல்லில் எருது நீக்கப்பட்டமை , அக்காலத்தில் இந்துசமயம் செல்வாக்கு செலுத்தியதை உணர்த்துகின்றது .

வாலாற்றைக் கற்பதால் ஏற்படும் பயன்களைத் தந்து அவற்றுள் இரண்டை விளக்குக .


1. இறந்தகால அனுபவங்கள் மூலம் நிகழ்காலத்தைப் புரிந்து எதிர்காலத்தை சிறப்பாச் குதல் . 

2. மாற்றுக்கலாசாரத்தை மதித்தல் 

3. தான் வாழும் சமூகம் மற்றும் உலகம் பற்றிய புரிந்துணர்வைப் பெறுதல் 

4. நாட்டின் தேசிய தனித்துவத்தை அறிந்து கொள்ளுதல் . 

5. மனிதத் தன்மையை மதிப்பதன் மூலம் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தல் .

 6. வேறுபட்ட கருத்துக்களையும் சகித்துக் கொள்ளல் . 

இறந்தகால அனுபவங்கள் மூலம் நிகழ்காலத்தைப் புரிந்து எதிர்காலத்தை சிறப்பாக்குதல் .


 இறந்த கால அனுபவங்களின் அடிப்படையில் எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப வரலாறு எமக்கு உதவுகின்றது . வரலாற்றின் பக்கங்களை நாம் புரட்டிப் பார்க்கும் பொழுது எத்தனையோ சம்பவங்களும் அவற்றால் ஏற்பட்ட விளைவுகளும் காணப்படுகின்றன . இவை எமது வாழ்கைக்கு சிறந்த படிப்பினைகளாக விளங்குகின்றன . வரலாற்றைக் கற்கும் ஒருவர் தனது எச்செயலையும் நன்கு திட்டமிட்டே செய்வார் . பண்டுகாபயன் அநுராதபுர நகரை திட்டமிட்டு நிருவகித்தான் . நகரை சுத்தம் செய்ய 500 பேரையும் மலசல கூடங்களை சுத்தம் செய்ய 22 பேரையும் நியமித்தான் . ஆளுநர் நோத் திட்டமிடாது கண்டிமீது படையெடுத்ததனால் தோல்வியடைந்தார் . எனவே இத்தகைய வரலாற்றுச் சம்பவங்களைக் கற்கும் ஒருவர் , திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் தனது எதிர்காலத்தை வளமாக்க முடியும் .

 மாற்றுக்கலாசாரத்தை மதித்தல் .


 இலங்கை பல கலாசாரங்களைக் கொண்ட ஒரு நாடாகும் . இலங்கையில் நீடித்த சமாதானமும் நிலையான அமைதியும் நில வேண்டுமானால் மாற்றுக் கலாசாரங்களை மதிக்கும் பண்பு மக்களிடையே வளரவேண்டும் . வரலாறு பாடம் மாற்றுக்கலாசாரத்தை மதிக்கும் பண்பை வளர்க்கின்றது . பண்டுகாபயன் பல இனத்தவர்களுக்குமுரிய வணக்கஸ்தலங்களை அநுராதபுரத்தில் நிர்மாணித்தான் . உதாரணமாக கொல்லர்கள் வழிபட்ட கம்மாரதேவ என்ற பெயருள்ள தெய்வத்திற்கு தனியாக வணக்கஸ்தலத்தை அமைத்தான் . தமிழ் மன்னனான எல்லாளன் தனது தளபதிகளாகவும் போர் வீரர்களாகவும் சிங்களவர்களையும் நியமித்தான் . பௌத்த மன்னனான துட்டகைமுனு எல்லாளனின் சமாதிக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று கட்டளையிட்டான் . இச்சம்பவங்கள் மாற்றுக் கலாச்சாரத்தை மதிக்கும் பண்பை வளர்க்கின்றன.

தொல்பொருள் மூலாதாரங்களைப் பாதுகாப்பது தற்போது அவசியமாக உள்ளது இதற்கான காரணங்களைத் தருக . 


1. எமது வரலாற்றை அறிய உதவும் தொல்பொருள் மூலாதாரங்களை எமது முன்னோர்கள் பாதுகாத்ததன் காரணமாகவே அவை நமக்குப் பயன்படுகின்றன . அதுபோல நாமும் அவற்றைப் பாதுகாப்பதன் மூலம் எதிர்கால சந்ததியினருக்கு உதவ முடியும் . 

2 பல தொல்பொருள் மூலாதாரங்கள் அழிந்துவிட்டன . கருங்கல் , உலோகம் முதலியவற்றால் உருவாக்கப்பட்ட தொல்பொருட்களே தற்போது எஞ்சியுள்ளன . எனவே இன்று இருக்கும் தொல்பொருட்களை அழிவிலிருந்து பாதுகாப்பது எமது கடமையாகும் . 

3. தற்போது நடைமுறைப் படுத்தப்படும் பல வேறு அபிவிருத்தித் திட்டங்களால் தொல்பொருட்கள் இருக்கக் கூடிய பல இடங்கள் மறைந்து போகும் நிலை ஏற்படுகின்றது . 

4. தற்போது சுரங்க மறுத்தல் , புதையல் தோண்டுதல் முதலிய அதிகம் இடம் பெறுகின்றன . இதனால் தொல்பொருள் மூலாதாரங்கள் அழிவடைகின்றன . 

5. உல்லாசப் பிரயாணிகளால் தொல்பொருட்கள் சேதமடைகின்றன . எனவே தொல்பொருள் மூலாதாரங்களை அழிவிலிருந்து பாதுகாப்பது எமது கடமையாக 4 . உள்ளது .

தொல்பொருள் மூலாதாரங்களை பாதுகாக்க எடுக்கக் கூடிய நடவடிக்கைகளைத் தருக .


1. மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் தொல்பொருள் மூலாதாரங்களைப் பாதுகாக்க முடியும் . உதாரணமாக " பொலன்னறுவையில் உள்ள பராக்கிரமபாகு சிலை , பொலன்னறுவை யுகத்தை நினைவுபடுத்தும் ஒரு சின்னம் . இவ்வாறான சின்னங்களே எமது நாட்டுக்கு பெருமை சேர்க்கின்றன " என்று மக்களுக்கு விளக்கமளிக்கும் போது , அவர்களுக்கு அச்சின்னங்களை பாதுகாக்கவேண்டும் என்ற உணர்வு ஏற்படுகின்றது . 

2. தொல்பொருள் மூலாதாரங்களை சேதப்படுத்துபவர்களுக்கு எதிராக கூட்டங்களைக் கொண்டுவருவதன் மூலம் , தொல்பொருட்களைப் பாதுகாக்க முடியும் . உதாரணமாக சிகிரியா ஓவியங்களை சேதப்படுத்துபவர்களையும் அங்குள்ள கண்ணாடிச் சுவர்களில் எழுதுபவர்களையும் கைது செய்வதன் மூலம் தொல்பொருட்களைப் பாதுகாக்கலாம் . 

3 . உல்லாசப் பிரயாணிகளுக்கு போதிய அறிவுறுத்தல்களை வழங்குவதன் மூலம் தொல்பொருட்களை பாதுகாக்கலாம் போதிய அறிவுறுத்தல் தமிழில் இல்லாததனால் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சிகிரியா ஓவியத்தில் தனது பெயரை எழுதினார் . இவருக்கு 2 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது . 

4. அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளும் போது , தொல்பொருளியல் நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெறுதல் . 

5. சுரங்கமறுத்தலுக்கு அனுமதிப்பத்திரங்களை வழங்கல் . 

6. பாடசாலைகள் தோறும் வரலாறு சங்கங்களை உருவாக்கி அருகில் உள்ள தொல்பொருள் மூலாதாரங்களை பாதுகாப்பதில் மாணவர்களையும் ஈடுபடுத்தல் .

பின்வருவன பற்றி சிறிகுறிப்புக்கள் வரைக


 1. நிக்சந்த செனவியா பிரிவெனா 

2. பாஹியன் தேரர்

 3. ஹியுங் சாங் 

4. ஜோவாவோ ரிபைரோ

 5. பிலிப்பஸ் பொல்தெவுஸ் 

6. றொபட் நொக்ஸ் 

திக்சந்த பிரிவெனா 


பௌத்த கல்வி நிலையம் பிரிவெனா என்று அழைக்கப்படுகிறது . அநுராதபுர மகாவிகாரைக்குரிய பல பிரிவெனாக்கள் இருந்தன . அவற்றுள் ஒன்று திக்சந்த பிரிவெனா ஆகும் . மகாநாமதேரர் இப்பிரிவெனாவில் வாழ்ந்தார் . 

பாஹியன் தேரர் 


சினாவைச் சேர்ந்த இவர் பௌத்த நூல்களைத் தேடி இந்தியாவுக்கு கால்நடையாக வந்தார் . இவர் ஐந்தாம் நூற்றாண்டில் இலங்கைக்கு வந்து அபயகிரிவிகாரையில் 2 வருடங்கள் தங்கியிருந்தார் . இவர் எழுதிய பயணக் குறிப்புக்களில் இலங்கை பற்றிய பல தகவல்கள் அடங்கியுள்ளன .

 ஹியுங்சாங் 


ஹியுங்காங் ( கி.பி 602 - 664 ) சீனாவைச் சேர்ந்த ஒரு தேரர் . அவர் தலயாத்திரையை மேற்கொண்டு இந்தியாவுக்கு வந்தார் . கி.பி 629 லிருந்து அவர் 10 வருடங்கள் தனது யாத்திரையில் ஈடுபட்டார் . அவர் இந்தியாவிலிருந்து இலங்கை பற்றி சேகரித்த தகவல்கள் இலங்கையின் ஏழாம் நூற்றாண்டின் வரலாற்றை அறிய உதவுகின்றன . 

ஜோவாவோ ரிபைரோ : 


இவர் 1640 இல் போர்த்துக்கல்லிருந்து ஒரு போர் வீரராக இலங்கைக்கு வந்தார் . 18 வருடங்கள் இலங்கையில் கடமையாற்றிய இவர் , தாய்நாடு திரும்பி இலங்கை பற்றி சில நூல்களை எழுதின 17 ம் நூற்றாண்டின் இலங்கை வரலாற்றை அறிய இவை உதவுகின்றன .

பிலிப்பஸ் பொல்தெவுஸ் ( கி.பி. 1632 - 1672 ) 


இவர் ஒல்லாந்து கல்வினிஸ்த மதகுரு ஆவார் . இவர் ஒல்லாந்து படையினருடன் இலங்கைக்கு வந்தார் . இவர் இலங்கையைப் பற்றி சில குறிப்புக்கள் எழுதினார் . அவ்வறிக்கைகள் டச்சுமொழியிலும் ஜேர்மன் மொழியிலும் வெளியிடப்பட்டன . இவ்வறிக்கை இலங்கையின் வடபகுதிமக்களின் மொழி , பண்பாடு பற்றி அறிந்துகொள்ள உதவுகின்றது .

 றொபட்நொக்ஸ் ( கி.பி 1641 - 1720 )


 இவர் தனது தந்தையாகிய நொக்ஸ் என்பவருடன் " ஆன் " என்ற கப்பலில் இந்தியாவுக்கு வந்தார் . பிரித்தானியாவைச் சேர்ந்த றொபட் நொக்ஸுவுக்கு அப்போது 14 வயதாக இருந்தது . 1658 இல் இவரது கப்பல் பாரசிகம் நோக்கி பயணித்த வேளையில் விபத்துக்குள்ளாகி இலங்கையின் கொட்டியாரக் கரையை அடைந்தது . கொட்டியாபுரக் கரையில் இருந்த ஒரு புளியமரப் பொந்தில் இவர் உட்பட 16 பேரும் ஒளிந்திருந்த போது , கண்டி மன்னன் 2 ம் இராஜசிங்கனின் வீரர்களால் கைது செய்யப்பட்டார்கள் . இவர் 19 வருடங்கள் கண்டிச்சிறையில் இருந்தார் . பின்பு சிறையிலிருந்து தப்பி மன்னாரில் உள்ள அரிப்பு என்ற இடத்தை அடைந்தார் . அங்கிருந்து பற்றேவியாவை அடைந்து , பின்பு தனது தாயகத்தை அடைந்தார் . தாயகம் மீண்ட அவர் இலங்கையின் அனுபவங்களை விபரித்து இலங்கைத் தீவுடனான வரலாற்று உறவு ' An historical relation of island ceylon ' என்ற நூலை எழுதினார் . இந்த நூல் 1681 இல் வெளியிடப்பட்டது . இலங்கையின் சமு அமைப்பை விபரிக்கும் ஓவியங்களும் இந்நூல் இயம் பெற்றுள்ளன . இவர் கைதுசெய்யப்பட்ட புளிய மரம் இருந்த வீதி தற்போதும் நொக்ஸ்வீதி என்று அழைக்கப்படுகின்றது .

 பானாவோ டீ குவாரோஸ் :


 போர்த்துக்கல்லைச் சேர்ந்த இவர் இயேசு சபை போதகராவர் . 1688 இல் இலங்கைக்கு வந்த இவர் ( Temporal and spiritual conqucst of ccylon ) என்ற நூலை எழுதினார் . இலங்கைக்கு வராமல் இந்தியாவில் இருந்தே இவர் இந்நூலை எழுதினார் .



Post a Comment

0 Comments